EKcaopZU8AADyHd
செய்திகள்அரசியல்இலங்கை

கூட்டமைப்பு தலைமைகள் ஆதரவு – உறுப்பினர்கள் எதிர்ப்பு!!

Share

யாழ்.மாநகரசபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு நாளை (15) யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் கூட்டமைப்பின் முடிவை காணும் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக் கூட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வட மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

16 உறுப்பினர்களும் சரமாரியான குற்றச்சாட்டுக்களை முதல்வர் மணிவண்ணன் மீது ஆதாரத்துடன் சுமத்தினார்கள்.

இந்நிலையில், கட்சித்தலைமைகள் பாதீட்டை ஆதரிப்பதென முடிவு எடுக்கும் நிலையில் இருந்தாலும், உறுப்பினர்கள் அந்த கருத்துக்கு ஒத்துப்போகவில்லை.

அத்துடன், யாழ்.மாநகரசபையின் முதல்வர் வி.மணிவன்ணன் தமிழரசு கட்சித்தலைவர் உட்பட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடம் பாதீட்டை ஆதரிக்குமாறு கோரியிருந்தார்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் பேரம் பேசும் நடவடிக்கைகளில் யாழ்ப்பாணத்தின் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் களம் இறங்கியுள்ளதாகவும் கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

பலராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் யாழ்.மாநகரசபையின் பாதீட்டில் மணிவண்ணன் அணியினருடன் ஈ.பி.டி.பி ஆதரவு அளிக்கும் எனவும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நடுநிலைமை வகிக்க கூடும் எனவும் அரசியல் விமர்சகர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தொடர்பில் வாக்களிப்பு இடம்பெறும் கடைசி நிமிடம் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...