New Project 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

53 நாட்களுக்குப் பிறகு மீண்டது ரயில் பாதை: நாளை முதல் கொழும்பு – பலாவி இடையே ரயில் சேவை ஆரம்பம்!

Share

டித்வா (Ditwah) புயல் காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு முதல் பலாவி வரையான ரயில் போக்குவரத்து, நாளை (19) முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

புயலினால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக நீர்கொழும்பிலிருந்து புத்தளம் வரையான ரயில் பாதை கடுமையாகச் சேதமடைந்திருந்தது. குறிப்பாக, பத்துளுஓயா (Battuluoya) பாலத்திற்கு அருகில் சுமார் 200 அடிக்கும் அதிகமான ரயில் பாதை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு முழுமையாக அழிவடைந்திருந்தது.

முதற்கட்டமாக மஹவெவ பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் சரி செய்யப்பட்டு, சிலாபம் வரை ரயில்கள் இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஏனைய பகுதிகளில் ரயில்வே திணைக்களத்தின் பாதை பராமரிப்புப் பிரிவினர் இரவு பகலாகப் பணிகளை முன்னெடுத்தனர்.

அனைத்துப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சோதனைகளும் இன்று (18) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

சுமார் 53 நாட்கள் இடைவேளைக்குப் பின்னர், நாளை (19) காலை முதல் கொழும்பிலிருந்து பலாவி வரை அலுவலக ரயில்கள் (Office Trains) வழமை போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மார்க்கமாகப் பயணிக்கும் ஆயிரக்கணக்கான அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், இந்த ரயில் சேவை மீளாரம்பிக்கப்படுவதன் மூலம் கடந்த இரண்டு மாதங்களாக எதிர்நோக்கி வந்த போக்குவரத்துச் சிரமங்களிலிருந்து விடுபடுவர். ஏனைய சேவைகள் குறித்தான விபரங்கள் அந்தந்த ரயில் நிலையங்களில் அறிவிக்கப்படும்.

 

 

Share
தொடர்புடையது
images 3 6
உலகம்செய்திகள்

பிரித்தானியா ஸ்தம்பிக்குமா? ஒரு வார கால முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள ‘he Great British National Strike அமைப்பு!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் புலம்பெயர்தல் விவகாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய ரீதியில் ஒரு...

Dead 1200px 22 10 28 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: மகள் மூட்டிய குப்பைத் தீ பரவி படுக்கையில் இருந்த தாய் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – அரியாலையில் மகள் மூட்டிய குப்பைத் தீயானது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் பரவியதில், படுக்கையில்...

archuna bail
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை அச்சுறுத்தல்: மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று(29) மல்லாகம்...

virat kohli 183099488 sm
விளையாட்டுசெய்திகள்

விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீர் மாயம்: நள்ளிரவு ‘ஷாக்’ கொடுத்துவிட்டு மீண்டும் திரும்பிய ‘கிங்’!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (@virat.kohli) இன்று (30) அதிகாலை...