1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

Share

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல் மீண்டும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre – DMC) தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த வீதி கனமழை மற்றும் மண்சரிவு காரணமாகக் கனேதென்ன (Ganetenna) பகுதியில் மூடப்பட்டிருந்தது.

பின்னர், போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு குறித்த வீதி ஒரு வழிப் பாதையாகத் தற்காலிகமாகத் திறக்கப்பட்டிருந்தது.

தற்போது நிலவும் வானிலை மற்றும் பாதுகாப்புக் காரணிகளைக் கருத்தில் கொண்டு, இன்று இரவு முதல் மீண்டும் அந்த வீதி முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், மறு அறிவிப்பு வரும் வரை வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது

Share
தொடர்புடையது
articles2FUK4fwSxpXY292Ae6yxC9
செய்திகள்உலகம்

மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ஒரே நாளில் இருமுறை அதிர்ந்ததால் மக்கள் அச்சம்!

மியன்மாரில் இன்று மாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும்...

court
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை...

image 2f3d7cb265
செய்திகள்இலங்கைபிராந்தியம்

70 ரூபாய் குடிநீர் போத்தல் 100 ரூபாய்க்கு விற்பனை: கொழும்பு வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக...

penguin viral video 1769232930
உலகம்செய்திகள்

தனிமைப் பயணம்: இணையத்தைக் கலக்கும் நிகிலிஸ்ட் பென்குயின்! தத்துவமா? அல்லது அறிவியலா?

தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்து, பனிபடர்ந்த மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்லும் ஒரு சிறிய...