வெளிப்படை தன்மையுடன் செயற்பட்டால் ஒத்துழைப்பு வழங்கலாம்! – கூறுகிறார் கபீர் ஹாசீம்

KABIR

அரசு வெளிப்படை தன்மையுடன் செயற்பட்டால், நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பிரிவினருக்கும், மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு இன்று மத்திய வங்கி கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” சர்வக்கட்சி மாநாட்டைக் கூட்டுமாறு நாம் ஒன்றரை வருடங்களாக வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் பஸ் சென்ற பிறகு பயணத்துக்கு தயாராகுவதுபோல, தற்போதுதான் அது பற்றி அரசு சிந்தித்துள்ளது.

இந்த அரசிடம் வெளிப்படைதன்மை இல்லை. அதனால்தான் சர்வக்கட்சி மாநாடு எனக் கூறிக்கொண்டு, தற்போது பொருளாதார சபையொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசு வெளிப்படை தன்மையுடன் செயற்பட்டால், நாட்டை மீட்க ஒத்துழைப்பு வழங்குவோம்.” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version