img
செய்திகள்இலங்கை

தென்னை அபிவிருத்தி சபை தலைவர் இராஜினாமா!!

Share

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்கவை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னை கித்துள் பயிர்ச்செய்கை ஊக்குவிப்பு மற்றும் கைத்தொழில் பொருட்கள் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5ஆம் திகதி பதவியை இராஜினாமா செய்யுமாறு அறிவிக்கப்பட்டதாகவும், அதன் பிரகாரம் இராஜினாமா கடிதம் தமக்கு அனுப்பி வைக்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் பதவியை இராஜினாமா செய்யுமாறு தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ராகம மருத்துவ பீடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட வாகனம் தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது என்பதால் அதன் தலைவரே பொறுப்பேற்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் பதவி விலகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
07 5
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு வான்பரப்பு மூடல்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 12 விமான சேவைகளை ரத்து செய்தது!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ப் பதற்றம் மற்றும் வான்பரப்பு மூடப்பட்டிருப்பதன் காரணமாக, ஸ்ரீலங்கன்...

06 4
செய்திகள்உலகம்

ஈரான் எல்லையில் அதிரடி: ஊடுருவல் முயற்சியைத் தடுத்ததாக IRGC அறிவிப்பு!

ஈரானின் மேற்கு எல்லைப் பகுதியினூடாக ஊடுருவித் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த பிரிவினைவாதக் குழுக்கள் மீது, ஈரான்...

05 4
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு பதற்றம்: அவுஸ்திரேலியா தனது இராணுவ விமானங்களை அனுப்பி வைத்தது!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா தனது...

04 4
செய்திகள்இலங்கை

உணவுப் பொதிகளில் கடத்தப்பட்ட 53.6 கோடி போதைப்பொருள்: மலேசியாவிலிருந்து வந்த பார்சல்கள் சிக்கின!

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு உணவுப் பொதிகள் என்ற பெயரில் கடத்தப்பட்ட சுமார் 536 மில்லியன் ரூபா (53.6...