img
செய்திகள்இலங்கை

தென்னை அபிவிருத்தி சபை தலைவர் இராஜினாமா!!

Share

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்கவை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னை கித்துள் பயிர்ச்செய்கை ஊக்குவிப்பு மற்றும் கைத்தொழில் பொருட்கள் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5ஆம் திகதி பதவியை இராஜினாமா செய்யுமாறு அறிவிக்கப்பட்டதாகவும், அதன் பிரகாரம் இராஜினாமா கடிதம் தமக்கு அனுப்பி வைக்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் பதவியை இராஜினாமா செய்யுமாறு தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ராகம மருத்துவ பீடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட வாகனம் தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது என்பதால் அதன் தலைவரே பொறுப்பேற்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் பதவி விலகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...