Lockdown RL SM
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்கள்

Share

தமிழகத்தில் கொரோனா பரவலிற்கு முட்டுக்கட்டை போடுவதற்கும் , ‘ஒமைக்ரான்’ சமூக பரவல் ஆககூடாது என்பதற்காகவும் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது.

அதன்படி கடந்த 6-ந் திகதி தொடக்கம் இரவு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக காய்கறி, இறைச்சி கடைகள், ஆடை-நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படவில்லை. மதுபான கடைக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் முற்றிலும் இயங்காது. குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரயில்கள் மட்டும் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டது. உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் நடைபெறுகிறது.

ரயில்இ விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. பயணிகளை இறக்கிவிட்டு திரும்பும்போது அவர்களிடம் டிக்கெட் பிரதியை பெற்று வைத்திருக்க வேண்டும் என ஓட்டுனர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியிருந்தனர்.

நேற்று இரவு 10 மணியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் நேற்று இரவில் தொடங்கப்பட்ட வாகன சோதனை இன்றும் நீடித்தது.
சென்னையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 312 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டது.

அத்தியாவசிய பணிகளுக்காக சென்றவர்களை அடையாள அட்டையை பார்த்து உறுதி செய்த பிறகே பொலீசார் அனுமதித்தனர். ஒவ்வொரு சந்திப்புகளில் 5 காவலர்கள் வரை கண்காணிப்பு பணியில் இருந்தார்கள். முக்கிய சந்திப்புகளில் பந்தல்களை போட்டு தடுப்புகளை அமைத்து கண்காணித்தனர். இதன் காரணமாக சென்னையில் இன்று பரபரப்பாக காணப்படும் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

சென்னையை போலதே திருச்சி, மதுரை, நெல்லை,தூத்துக்குடி, தென்காசி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பகிறது

#worldnews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...