MediaFile 5
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கப்பட்ட 19 துப்பாக்கிகள்: CID தீவிர விசாரணை என அரசாங்கம் தகவல்!

Share

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் அது சார்ந்த விவகாரங்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இது குறித்துப் பின்வருமாறு விளக்கமளித்தார்:

டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்ட விவகாரம் மற்றும் அவரிடம் இருந்த துப்பாக்கிகள் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கொலை விசாரணைப் பிரிவே விசாரணைகளை நடத்துகின்றது.

கடந்த 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவருக்கு 13 ‘ரி-56’ (T-56) ரகத் துப்பாக்கிகள் மற்றும் 6 பிஸ்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை தொடர்பான சட்டப்பூர்வத் தன்மை மற்றும் பயன்பாடு குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது அவர் கம்பஹா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) கடந்த காலங்களில் மேற்கொண்டதாகக் கூறப்படும் கொலைகள், கடத்தல்கள், கப்பம் கோருதல் மற்றும் ஊழல் முறைகேடுகள் அனைத்தும் விரைவில் அம்பலமாகும் என்றும், அதனை நீதித்துறை உறுதிப்படுத்தும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
26 6956109675232
செய்திகள்உலகம்

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கர வெடிவிபத்து: பலர் உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) நகரில் உள்ள ஒரு பாரில் (Bar) ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கிப்...

WhatsApp Image 2025 07 30 at 10.13.14 1
இலங்கைஅரசியல்செய்திகள்

குற்றவாளிகள் எங்கு இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் வலியுறுத்தல்!

வடக்கு அல்லது கிழக்கு என எந்தப் பிரதேசத்தில் யார் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் கடந்த காலத்தில்...

feeffef8b9eb82ce9b06f1c9550878a1460042ec
செய்திகள்அரசியல்இலங்கை

வரி ஏய்ப்பாளர்களுக்கு ஜனாதிபதியின் கடும் எச்சரிக்கை: வாகன இறக்குமதியை நிறுத்த முடியாது!

இலங்கையில் வரி ஏய்ப்பு செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பதவி அல்லது தராதரம் பாராது...

LK94009836 03 E
செய்திகள்அரசியல்இலங்கை

கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் தொல்லியல் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்: தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் மற்றும் கோரிக்கை!

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான...