ZWB3SSOZ4BPMZBJGFWYDQWLNH4
செய்திகள்அரசியல்இலங்கை

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ நாளை இலங்கை வருகை: முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை!

Share

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை (12) இலங்கை வருகின்றார். எத்தியோப்பியா, சோமாலியா, தான்சானியா மற்றும் லெசோதோ ஆகிய ஆபிரிக்க நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துகொண்டு அவர் இலங்கை வரவுள்ளார்.

செவ்வாய்க்கிழமை காலை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை காலை போசனத்துடன் சந்தித்து வாங் யீ கலந்துரையாடுவார்.

கொழும்பு போர்ட் சிட்டி (Port City) உள்ளிட்ட சீன நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களை விரைவுபடுத்துவது மற்றும் புதிய சீன முதலீடுகளை இலங்கைக்கு ஈர்ப்பது குறித்து இங்கு முக்கியமாக ஆராயப்படவுள்ளது.

சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பது மற்றும் கொழும்புக்கான விமான சேவைகளை விஸ்தரிப்பது தொடர்பில் இலங்கையினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படும்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதியைச் சந்தித்த குறுகிய காலப்பகுதிக்குள் சீன வெளியுறவு அமைச்சரின் இந்த வருகை இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இது பிராந்திய ரீதியாக மூலோபாயப் பங்காளிகளுடன் பரஸ்பர நம்பிக்கையை ஆழப்படுத்தும் சீனாவின் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...