20251107025546 hhh
செய்திகள்உலகம்

16,000 அடிகள் நடந்ததாகக் குற்றம்சாட்டிப் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Share

சீனாவில், கால் வலியால் விடுப்பில் இருந்த ஊழியர் ஒருவர், ஒரு நாளில் 16,000 ‘அடிகள்’ (Steps) நடந்ததைச் சுட்டிக்காட்டி ஒரு தனியார் நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த அநியாயப் பணி நீக்கத்தை எதிர்த்து அந்த ஊழியர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததில், அவருக்குச் சுமார் ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் சென் (Chen).

முதுகுவலி காரணமாக 2019ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை விடுப்பு எடுத்த சென், மீண்டும் அலுவலகம் வந்து அரை நாள் பணி செய்த நிலையில், கால் வலி காரணமாக மீண்டும் விடுமுறைக்கு விண்ணப்பித்தார். மருத்துவ ஆவணங்களின் அடிப்படையில் அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டது.

விடுப்பைப் பலமுறை நீட்டிப்பு செய்ததால் கோபமடைந்த நிறுவனம், சென் தனது மருத்துவ ஆவணங்களுடன் அலுவலகத்துக்கு வந்தபோது, அவரைப் பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது.

விடுப்பில் இருந்த சென் ஒரு நாளில் 16,000 ஸ்டெப் வரை நடந்துள்ளதாகவும், மருத்துவ ஆவணங்களை நிறுவனத்துக்குத் திருப்பும்போது ஓடிவந்ததாகவும் கூறி, அவர் போலியான மருத்துவ ஆவணங்களில் விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளதாகக் குற்றம்சாட்டிப் பணி நீக்கம் செய்தது.

இதனால் பாதிக்கப்பட்ட சென், நிறுவனத்துக்கு எதிராகத் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் சென் அலுவலகத்தை நோக்கி ஓடி வருவது மற்றும் அவர் தினமும் எத்தனை ஸ்டெப் நடந்தார் என்பதைக் காட்டும் தொழில்நுட்ப ஆதாரங்களை நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்த ஆதாரங்களை ஏற்க மறுத்த நீதிமன்றம், சென்னின் மருத்துவ ஆவணங்கள் சரியானதாக இருந்ததாகவும், திடீர் பணி நீக்கத்தால் அவர் பாதிக்கப்பட்டதாகவும் கூறியது. சென்னின் பணி நீக்க நடவடிக்கையை ஏற்க முடியாது என்று கூறிய நீதிமன்றம், அவருக்கு 1,18,779 யுவான் (இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 50,76,892 ரூபாய் 51 சதம்) நிவாரணம் வழங்க உத்தரவிட்டது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...