20251107025546 hhh
செய்திகள்உலகம்

16,000 அடிகள் நடந்ததாகக் குற்றம்சாட்டிப் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Share

சீனாவில், கால் வலியால் விடுப்பில் இருந்த ஊழியர் ஒருவர், ஒரு நாளில் 16,000 ‘அடிகள்’ (Steps) நடந்ததைச் சுட்டிக்காட்டி ஒரு தனியார் நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த அநியாயப் பணி நீக்கத்தை எதிர்த்து அந்த ஊழியர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததில், அவருக்குச் சுமார் ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் சென் (Chen).

முதுகுவலி காரணமாக 2019ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை விடுப்பு எடுத்த சென், மீண்டும் அலுவலகம் வந்து அரை நாள் பணி செய்த நிலையில், கால் வலி காரணமாக மீண்டும் விடுமுறைக்கு விண்ணப்பித்தார். மருத்துவ ஆவணங்களின் அடிப்படையில் அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டது.

விடுப்பைப் பலமுறை நீட்டிப்பு செய்ததால் கோபமடைந்த நிறுவனம், சென் தனது மருத்துவ ஆவணங்களுடன் அலுவலகத்துக்கு வந்தபோது, அவரைப் பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது.

விடுப்பில் இருந்த சென் ஒரு நாளில் 16,000 ஸ்டெப் வரை நடந்துள்ளதாகவும், மருத்துவ ஆவணங்களை நிறுவனத்துக்குத் திருப்பும்போது ஓடிவந்ததாகவும் கூறி, அவர் போலியான மருத்துவ ஆவணங்களில் விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளதாகக் குற்றம்சாட்டிப் பணி நீக்கம் செய்தது.

இதனால் பாதிக்கப்பட்ட சென், நிறுவனத்துக்கு எதிராகத் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் சென் அலுவலகத்தை நோக்கி ஓடி வருவது மற்றும் அவர் தினமும் எத்தனை ஸ்டெப் நடந்தார் என்பதைக் காட்டும் தொழில்நுட்ப ஆதாரங்களை நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்த ஆதாரங்களை ஏற்க மறுத்த நீதிமன்றம், சென்னின் மருத்துவ ஆவணங்கள் சரியானதாக இருந்ததாகவும், திடீர் பணி நீக்கத்தால் அவர் பாதிக்கப்பட்டதாகவும் கூறியது. சென்னின் பணி நீக்க நடவடிக்கையை ஏற்க முடியாது என்று கூறிய நீதிமன்றம், அவருக்கு 1,18,779 யுவான் (இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 50,76,892 ரூபாய் 51 சதம்) நிவாரணம் வழங்க உத்தரவிட்டது.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...