சீனத் தூதரகத்தின் கறுப்புப்பட்டியல் தீர்மானம்: மக்கள் வங்கியின் அதிரடி பதில்

peoples bank 01

சீனத் தூதரகத்தின் கறுப்புப்பட்டியல் தீர்மானத்துக்கு மக்கள் வங்கி தனது பதிலை வழங்கியுள்ளது.

நீதிமன்ற உத்தரவு மீளப் பெறப்பட்டதன் பின்னர் உரிய கொடுப்பனவை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் வங்கி அறிவித்துள்ளது.

உரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் நிலவிய உடன்படிக்கையை மீறி, நாணய கடிதத்துக்கான கொடுப்பனவை செலுத்தாததன் காரணமாக, இலங்கையின் மக்கள் வங்கியைக் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக அலுவலகத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version