25 6905eb3e5c516
செய்திகள்இலங்கை

உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு சந்திரிகா வெளியேற்றம்: உடைமைகளை மூட்டை கட்டும் படங்கள் வெளியீடு!

Share

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொழும்பில் உள்ள நிதாஹஸ் மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்காகத் தனது உடைமைகளை மூட்டை கட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை நீக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதிகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ குடியிருப்புகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற நவம்பர் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் கோரியிருந்தார்.

எனினும், அவரது ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்னாள் ஜனாதிபதி தற்போது உடைமைகளைப் பிரித்து வருவதாகவும், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அவர் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு விஜேராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஏற்கனவே வெளியேறி தங்காலைக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...