25 68f8957b5081f
செய்திகள்இலங்கை

செவ்வந்தி விவகாரத்திலிருந்து தப்பிய நபர் யார்? ஜே.கே.பாயின் திடுக்கிடும் வாக்குமூலம்

Share

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் பிரதான குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு கடத்தியதில் சிலோன் பாய் என்ற நபருக்கு தொடர்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நேபாளத்தில் செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜே.கே. பாய் இதனை வெளிப்படுத்தியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இஷார செவ்வந்தி பிடிபட்டபோது சிலோன் பாய் நேபாளத்தில் இருந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஜே.கே.பாயை போலவே, சிலோன் பாயும் துபாயில் இருந்து மனித கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும், தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம், பூட்டான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மாலைதீவுகளில் மனித கடத்தல்காரர்களுடன் இந்த சந்தேகநபர்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு இந்தியாவில் தங்குமிடம் வழங்கவும், வேறு நாட்டிற்கு தப்பிச் செல்ல தேவையான வசதிகளை வழங்கவும் குறித்த கடத்தல்காரர்கள் ரூ. 2 மில்லியன் முதல் அதற்கு மேல் பணம் வசூலிப்பதாகவும் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிலோன் பாய் தொடர்பாக விசாரணைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது

Share

Recent Posts

தொடர்புடையது
25 68fb42eb327aa
செய்திகள்இலங்கை

பாடசாலை நேர நீட்டிப்புக்கு எதிர்ப்பு: ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்ட எச்சரிக்கை!

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால்...

379161 crime 02 1
செய்திகள்இலங்கை

வாள்வெட்டு, போதைப்பொருள் கடத்தல்: சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்கு!

வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்த்த எட்டுப் பேருக்கு...

Kajen
செய்திகள்இலங்கை

“வடக்கு-கிழக்கில் போதைப்பொருள் பரவலுக்கு இராணுவமே காரணம்”: நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு!

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போதைப்பொருளைப் பரப்புவதில் இராணுவத்தினருக்குப் பெரும் பங்கு உள்ளது எனத் தமிழ்த்...

25 68fb1c1d6b80d
செய்திகள்இலங்கை

லசந்த விக்ரமசேகர மரணம்: தலையில் மற்றும் மார்பில் பலத்த காயம் – சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு உறுதி!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் மரணத்திற்கான காரணம், துப்பாக்கிச் சூட்டினால் தலை மற்றும்...