25 68f8957b5081f
செய்திகள்இலங்கை

செவ்வந்தி விவகாரத்திலிருந்து தப்பிய நபர் யார்? ஜே.கே.பாயின் திடுக்கிடும் வாக்குமூலம்

Share

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் பிரதான குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு கடத்தியதில் சிலோன் பாய் என்ற நபருக்கு தொடர்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நேபாளத்தில் செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜே.கே. பாய் இதனை வெளிப்படுத்தியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இஷார செவ்வந்தி பிடிபட்டபோது சிலோன் பாய் நேபாளத்தில் இருந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஜே.கே.பாயை போலவே, சிலோன் பாயும் துபாயில் இருந்து மனித கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும், தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம், பூட்டான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மாலைதீவுகளில் மனித கடத்தல்காரர்களுடன் இந்த சந்தேகநபர்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு இந்தியாவில் தங்குமிடம் வழங்கவும், வேறு நாட்டிற்கு தப்பிச் செல்ல தேவையான வசதிகளை வழங்கவும் குறித்த கடத்தல்காரர்கள் ரூ. 2 மில்லியன் முதல் அதற்கு மேல் பணம் வசூலிப்பதாகவும் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிலோன் பாய் தொடர்பாக விசாரணைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...