car 2
செய்திகள்உலகம்

தீவிரவாதிகளால் இங்கிலாந்தில் கார் குண்டுத்தாக்குதல்!

Share

இங்கிலாந்தில் தீவிரவாதிகளால் கார் குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ளது லிவர்பூல் நகரதிலுள்ள பெண்கள் வைத்தியசாலைக்கு அருகே நேற்று வாடகை கார் ஒன்று வந்து நின்றது. அதில் சாரதியும் , ஒரு பயணியும் இருந்தனர்.

கார் நின்ற சில விநாடி அதில் இருந்து குண்டு வெடித்தது.

இதில் கார் முழுமையாகச் சிதறியது.

காரில் இருந்த பயணி அந்த இடத்திலேயேசாவடைந்தார் .

காரின் சாரதி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டுருந்த அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர் .

அவர் மோசமான நிலையில் இருந்து தப்பித்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் அந்த பகுதியில் கடும் பீதி ஏற்பட்டது.

அதையடுத்து அங்கு பொலிஸாரும்,இராணுவமும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு குண்டு வைத்த தீவிரவாதிகள் வைத்தியசாலையிலிருந்து இருந்து 1 கி.மீட்டர் தூரம் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது பொலிஸாருக்கு தகவல் வந்ததை அடுத்து அங்கிருந்த 3 தீவிரவாதிகளை கைது செய்தனர்.

கார் குண்டு தாக்குதலில் சாவடைந்தவர் பற்றிய விவரம் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் நடத்தப்பட்ட தாக்குதல் தீவிரவாதிகளின் தாக்குதல் என்பதால் இங்கிலாந்து முழுவதும் சோதனைகள் இடம்பெற்று வருகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...