24 67421635defa1 md
செய்திகள்உலகம்

நெதன்யாகுவை கைது செய்வதாக கனடா பிரதமர் மார்க் கார்னி உறுதி: இஸ்ரேல் எதிர்ப்பு!

Share

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) பிடியாணை உத்தரவின்படி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கைது செய்வதாகக் கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) வெளியிட்ட அறிவிப்பு தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணை உத்தரவு தொடர்பில் கார்னி வெளியிட்ட தனது உறுதிமொழியைக் கைவிடுமாறு இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட பத்திரிகை ஒன்றின் நேர்காணலில், நெதன்யாகு கனடாவுக்கு வந்தால், போர்க்குற்றச்சாட்டில் கைது செய்வதாக அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவீர்களா என மார்க் கார்னியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த கார்னி, “ஆம்” என்று பதிலளித்தார்.

இந்தக் கருத்தானது இஸ்ரேலியத் தரப்புக்கு தற்போது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இஸ்ரேலிய அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் ஷோஷ் பெட்ரோசியன் கருத்துத் தெரிவிக்கையில், “கார்னி இதை மறுபரிசீலனை செய்து, மத்திய கிழக்கில் உள்ள ஒரே யூத அரசு மற்றும் ஜனநாயக நாட்டின் தலைவரான பிரதமர் நெதன்யாகுவைக் கனடாவிற்கு வரவேற்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்: மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அனுதாபப் பிரேரணைகள் இன்று இடம்பெறுகிறது!

சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்றைய (அக்டோபர் 24, 2025) நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள்...

25 68fa9219d9e29 1
செய்திகள்உலகம்

ஜெர்மனியில் குழப்பம்: ராணுவப் பயிற்சி குறித்த தகவல் இல்லாததால், ராணுவ வீரரை சுட்டுக் காயப்படுத்திய காவல்துறை!

ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள மியூனிக் நகரில், பொதுமக்கள் முகமூடி அணிந்த சிலர் கட்டிடங்களுக்குள் சென்று...

25 68fac88cc2a44
செய்திகள்இலங்கை

2026 பட்ஜெட் உரைக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் 3 நாட்களுக்கு விசேட பாதுகாப்பு பரிசோதனை!

அடுத்த ஆண்டுக்கான (2026) பட்ஜெட் உரைக்கு முன்னதாக, அடுத்த மாதம் (நவம்பர்) மூன்று நாட்களுக்கு நாடாளுமன்ற...

25 67be1398d1cd3 770x470 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா தப்பிச் சென்ற படகை செலுத்திய யாழ் இளைஞன் அதிரடி கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட...