2026 ஆம் ஆண்டிலும் பாடசாலை மாணவர்களுக்கு எழுதுபொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த முன்மொழிவுக்கே இந்த அனுமதி கிடைத்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் அஸ்வெசும (Aswesuma) நலன்புரி கொடுப்பனவைப் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த அனைத்து பாடசாலை மாணவர்கள், அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படாத, ஆனால் 300-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் தகுதியுடைய மாணவர்கள்.
பிரிவெனாக்கள் மற்றும் சீலமாதா மடங்களில் கல்வி பயிலும் சாதாரண மற்றும் துறவி மாணவர்கள்.சிறுவர் மேம்பாட்டு மையங்களில் தங்கியிருந்து பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு தலா ரூ. 6,000 கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அஸ்வெசும குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கொடுப்பனவு நலன்புரி நன்மைகள் சபையின் ஊடாக வழங்கப்படும்.
ஏனைய பிரிவினருக்கான (பிரிவெனா, சிறுவர் இல்லங்கள்) கொடுப்பனவுகள் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஊடாக நேரடியாக வழங்கப்படும்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் கல்விச் சுமையைக் குறைக்கவும், புதிய கல்வி ஆண்டில் மாணவர்கள் எவ்விதத் தடையுமின்றி தமது கற்றல் நடவடிக்கைகளைத் தொடரவும் இந்த 6,000 ரூபாய் நிதி உதவி பெரும் துணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

