Best Fuel Cards for Small Businesses
செய்திகள்அரசியல்இலங்கை

அரச வாகனங்களுக்கு இனி டிஜிட்டல் கார்டு: முறைகேடுகளைத் தவிர்க்க அமைச்சரவை அதிரடி அனுமதி!

Share

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், புதிய டிஜிட்டல் அட்டை (Digital Card) முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

திட்டத்தின் நோக்கம் மற்றும் நன்மைகள்,தனிநபர் தலையீடுகளைக் குறைப்பதன் மூலம் எரிபொருள் விநியோகத்தில் இடம்பெறக்கூடிய முறைகேடுகள் தவிர்க்கப்படும்.

இணையவழி வங்கி முறைமை (Online Banking) ஊடாகத் தேவையான எரிபொருளுக்கான பணத்தை நேரடியாக ஈடுசெய்ய முடியும். காகித ஆவண முறைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் முறை பயன்படுத்தப்படுவதால் நிர்வாகப் பணிகள் வேகமடையும்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை வங்கி (Bank of Ceylon) மற்றும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ஆகிய இரண்டும் இணைந்து புதிய டிஜிட்டல் அட்டையை வடிவமைத்துள்ளன.

கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைய, முதற்கட்டமாக ஜனாதிபதி செயலகத்தின் (Presidential Secretariat) வாகனத் தொகுதிக்கு இந்த முறை அமுல்படுத்தப்படும்.

ஜனாதிபதி செயலகத்தில் இத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், நாட்டின் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இந்த டிஜிட்டல் அட்டை முறை விரிவுபடுத்தப்படும்.

 

 

 

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...