tr
செய்திகள்உலகம்

அகதிகள் நுழைவதைத் தடுக்க பிரித்தானியாவின் புதிய திட்டம்!

Share

அகதிகள் நுழைவதை தடுப்பதற்கு பிரித்தானியா புதிய திட்டமென்றை பிரான்சிடம் தெரிவித்துள்ளது.

பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து அகதிகள் பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுப்பதற்காக, பிரித்தானிய காவல்துறை பிரான்ஸ் கடல் பகுதியில் ரோந்து செல்லும் ஒரு திட்டத்தை உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேல் தெரிவித்துள்ளார்.

அத்திட்டத்தை பிரான்ஸ் அரசு நிராகரித்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அகதிகள் வருவதை தடுக்க பிரித்தானியா பிரான்சுக்கு பெரும் தொகையான நிதி கொடுத்தும் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கை கூடியவறே உள்ளதென பிரித்தானியாவின் உள்துறைச் செயலர் கூறியுள்ளார்.

ஆனால், அத்திட்டம் தமது இறையாண்மையை மீறும் என பிரான்ஸ் நிராகரித்துவிட்டதாக பிரீத்தி தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர் , பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் காவல்துறை இணைந்து ஆங்கிலக் கால்வாயில் ரோந்து செல்லும் ஒரு திட்டம் தொடர்பில் இன்னும் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...