தொல்புரம் மூட்டடி பிரதேசத்தில் 11 வயது சிறுவன் மீது கல் வீழ்ந்து உயிரிழந்துள்ளான்.
குறித்த வீட்டில் கட்டிட வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தவேளை சிறுவன் மீது கல் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து குறித்த சிறுவனை மீட்டு மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் ஏற்கனவே சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஜெயச்சந்திரன் கஜிதரன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சட்ட வைத்திய நடவடிக்கைகளுக்காக உடல் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment