20 10
இந்தியாசெய்திகள்

மகாராஸ்டிர அமைச்சரின் கொலைக்கு பொறுப்பேற்ற பிஸ்னோய் குழு

Share

மகாராஸ்டிர அமைச்சரின் கொலைக்கு பொறுப்பேற்ற பிஸ்னோய் குழு

இந்தியாவின் மகாராஸ்டிர மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டமைக்கு, சிறையில் உள்ள குற்றக்குழுவின் தலைவரான லோரன்ஸ் பிஸ்னோயின் குழு பொறுப்பேற்றுள்ளது.

பாபாவுக்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையிலும் நேற்று முன்தினம்(14.10.2024)துப்பாக்கித்தாரிகளால் அவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் படுகொலைக்கு பொறுப்பேற்றுள்ள பிஸ்னோய் குழு ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கும் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சல்மான் கானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சல்மான் கானுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கான காரணம் இதுவரையில், தெரியவரவில்லை.

எனினும், பாபா சித்திக்கின் குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கிறார் என்பதற்காக அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்றுள்ள பிஸ்னோய் குழு, தமது முகப்புத்தக பதிவில், “ஓம், ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் பாரத். நான் வாழ்வின் சாராம்சத்தைப் புரிந்துகொண்டு செல்வத்தையும் உடலையும் மண்ணாகக் கருதுகிறோம்.

நட்பின் கடமையை மதித்து, சரியானதை மட்டுமே செய்தோம்.

எங்களுக்கு யாருடனும் தனிப்பட்ட விரோதம் இல்லை. இருப்பினும், சல்மான் கான் அல்லது தாவூத் குழுவுக்கு உதவி செய்பவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

எங்கள் சகோதரர்கள் யாரேனும் கொல்லப்பட்டால், நாங்கள் பதிலடி கொடுப்போம். நாங்கள் முதலில் தாக்குவதில்லை.” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த பதிவின் உண்மைத்தன்மை குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...