கொழும்பு – மட்டக்குளி படகுத்துறையில் மிகப்பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த பகுதிக்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Leave a comment