வலி. வடக்கு பிரதேச சபை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் சைக்கிளில் பயணம்!

Share

நாட்டின் பொருளாதாரச் சுமையை வெளிப்படுத்தும் முகமாகவும், எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்தும் நாளை புதன்கிழமை வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர்கள் சைக்கிளில் சபை அமர்வுக்குச் செல்லவுள்ளனர்.

வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் கட்சி பேதமின்றி காலை 9 மணிக்கு வலி. வடக்கு ஆரம்பிக்கும் இடமாகிய சுன்னாகம் திருஞானசம்பந்தா வித்தியாலயத்தில் இருந்து சைக்கிள் பேரணி ஆரம்பமாகி, கொல்லங்கலட்டியில் அமைந்துள்ள பிரதேச சபைத் தலைமையகத்தைச் சென்றடைந்து, 9.30 மணிக்கு பிரதேச சபையின் மார்ச் மாத அமர்வு நடைபெறும்.

நாட்டில் பொருள்களின் விலை எகிறல், பொருளாதார சுமை, எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற வாழ்க்கைச்சுமையை மக்கள் எதிர்கொள்கின்றனர்.

இதனைக் கண்டித்து, வலி. வடக்கு பிரதேச மக்களின் பிரதிநிதிகள் ஒட்டுமொத்த மக்கள் சார்பாகத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக இந்தப் பேரணியை மேற்கொள்ளவுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...

04 22
உலகம்செய்திகள்

மழைக்கும் மத்தியிலும் ஈரான் தலைநகரில் பிரம்மாண்டப் போராட்டம்: உச்சத் தலைவருக்கு ஆதரவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் இன்று (மார்ச் 24, 2026)...

03 23
செய்திகள்இலங்கை

சீமெந்து விலை 2,250 ரூபாவாக அதிகரிப்பு: கட்டுமாணத் துறை மேலும் நெருக்கடி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கட்டுமாணப் பொருட்களின் விலைகள் மீண்டும்...