முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாவிட்டால் ஓமிக்ரோன் பரவும் அபாயம் உள்ளது என, லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர், டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், உலக நாடுகள் எல்லாவற்றிலும் ஒமிக்ரோன் வைரஸ் பரவியுள்ளது. இலங்கையிலும் ஒருவருக்கு பரவியுள்ளது.
அதனால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் . குறிப்பாக , நத்தார் காலப்பகுதியில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment