ToddlerFeet750
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தண்ணீர் தொட்டியில் தவறி வீழ்ந்து குழந்தை மரணம் !

Share

ஒரு வருடமும் மூன்று மாதமும் நிரம்பிய குழந்தையொன்று தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று முன்தினம் (30) ஊவா வெல்லஸ்ச, கோணகங்கார பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையை வீட்டுக்குள் நித்திரையாக்கிவிட்டு தாயும் தந்தையும் தோட்ட வேலைக்குசென்று, இடையிடையே தாயும் தந்தையும் மாறி மாறி உறங்கும் குழந்தையைப் பார்த்துச் சென்றுள்ளனர்.

மதியம் ஒரு மணியளவில் வந்து பார்த்த போது குழந்தை உறங்கிய இடத்தில் காணவில்லை. அப்பகுதி முழுவதும் தேடிய போது குழந்தைதண்ணீர் தொட்டியில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சிசுவின் பிரேத பரிசோதனை நேற்று (31) மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்றது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோணகங்கார பொறுப்பதிகாரி எல்.டி. சதீஷ்குமார மேற்கொண்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...