tamilnaadi 97 scaled
இந்தியாசெய்திகள்

ஓய்வெடுக்கவுள்ள அயோத்தி ராமர்

Share

ஓய்வெடுக்கவுள்ள அயோத்தி ராமர்

அயோத்தி ராமர் கோவிலை தினமும் ஒரு மணி நேரம் மூடுவதற்கு கோவிலின் அறக்கட்டளை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, குறித்த கோவிலை தினமும் பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவிக்கையில்,

“கோவிலின் கருவறையில் வீற்றிருக்கும் குழந்தை வடிவ ராமருக்கு ஐந்து வயதே ஆகிறது. அதிகாலை 4 மணிக்கு கண்விழிக்கும் அவரால் தொடர்ந்து விழித்துக்கொண்டே இருக்க முடியாது.

இதன் காரணமாக, அவருக்கு ஓய்வு வழங்குவதற்காகவே தினமும் ஒரு மணிநேரம் கோவிலை மூட தீர்மானித்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 500 வருட போராட்டங்களுக்கு பின்னர், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த மாதம் 22ஆம் (22.01.2024) திகதி கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்தது.

பிரமாண்டமாக நடைபெற்ற அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு ஏராளமான பிரபலங்கள் வந்திருந்ததோடு இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் சமய சடங்குகள் செய்யப்பட்டு கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், அயோத்தி ராமருக்கு தினமும் ஒரு மணிநேரம் ஓய்வு வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளமை பக்தர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...