T20
செய்திகள்விளையாட்டு

முதலாவது T20 கிண்ணத்தை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

Share

ஆஸ்திரேலியா தனது முதலாவது T20 கிண்ணத்தை கைப்பற்றியது.

நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி T20 உலகக் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

T20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதிக் கொள்ளும் இறுதி ஆட்டம் துபையில் இன்று இடம்பெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலிய முதலில் பந்து வீச்சைத் தெரிவு செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து 4 இலக்குகள் இழப்புக்கு 172 ஓட்டங்கள் எடுத்தது.

ஜிம்மி நீஷம் 13, டிம் செய்பெர்ட் 8 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக ஹேசில்வுட் 3 இலக்குகளை கைப்பற்றினார்.

ஆடம் ஷம்பா ஒரு இலக்கை வீழ்த்தினார்.

173 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பிஞ்ச் 5 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அதனைத் தொடர்ந்து மிட்சேல் மார்ஸ் மற்றும் டேவிட் வார்னர் கூட்டணி அதிரடி காட்டியது.

3 சிக்சர்களும் 4 பவுண்டரிகளும் விளாசியிருந்த வார்னர் 38 பந்துகளுக்கு 53 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணியின் டிரென்ட் பெளல்ட் கேட்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ச்சியாக ஆடிய மிட்சேல் 4 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் என விளாசி தள்ளினார்.

அவருக்கு சரியான இணையாக களத்தில் இருந்த கிளென் மாக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

18ஆவது ஓவரில் வெற்றிக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்ட மேக்ஸ்வெல் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

ஆஸ்திரேலியாவின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல்முறையாக T 20 உலகக் கோப்பையை அணி வென்றிருக்கிறது.கைப்பற்றியது.

#SPORTS

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...