நத்தார் பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீது வாகனமொன்றை மோதச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் அமெரிக்கா விஸகொன்சினின், வ்வுகோஷாவில் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் 20இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் சாவடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மக்கள் மீது மோதிய வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
9 முதல் 15 வயது வரையிலான சிறுமிகள் நடனமாடி மகிழ்ந்திருந்த தருணம், அவர்கள் மீது வாகனம் மோதியது என நேரில் பார்த்தவர்கள் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
#world
Leave a comment