D45cTpkU0AISZ02
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் என்ற ரீதியில் விடுதலைப்புலிகள் குறித்து பெருமைப்பட முடியும் – சரத் பொன்சேகா

Share

விடுதலைப் புலிகள் இலங்கையர்கள் என்ற ரீதியில் எம்மால் பெருமைப்பட முடியும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின் போதே இவர் இதனை தெரிவித்தார்.

இம்முறை வரவு செலவு திட்டத்தில் இராணுவப் பாதுகாப்புக்காக முன்னரை விடவும் 30 மில்லியன் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் யுத்த சூழல் நிலவாத காலத்தில் அதிக தொகை ஒதுக்கீடு சார்ந்து சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,

இது அர்த்தமற்ற கேள்வியாகும். யுத்தம் நிலவா விட்டாலும் நாட்டின் இராணுவத்தை பலமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

75 ஆயிரம் பேர் கொண்ட இந்திய இராணுவத்தினரால் வெறுமனே 2,500 போராளிகளை கொண்ட விடுதலைப் புலிகளுடன் தாக்குபிடிக்க முடியாது போன வரலாறும் எமக்கு உள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்டினார்.

 

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...