இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் நேற்று (21) இடம்பெற்ற இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்.
லேகாபாலியில் இருந்து புறப்பட்ட இராணுவ ஹெலிகொப்டர் உப்பர் சியாங் மாவட்டம் மிக்கிங் (தெற்கு டியுடிங்) பகுதியில் வெள்ளிக்கிழமை காலை விழுந்து விபத்துக்குள்ளானது.
இராணுவம் மற்றும் விமானப் படை இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டன. நீண்ட தேடுதலுக்குப் பின்பாக நான்கு பேரின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
#IndiaNews
Leave a comment