நைஜீரியாவில் பாடசாலை விடுதியில் கொடூரம்: ஆயுதம் ஏந்திய குழுவினால் 25 மாணவிகள் கடத்தல் – பாதுகாவலர் சுட்டுக்கொலை!

691cc63de4b0849d3c3c4866

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலமான கெப்பி (Kebbi) மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றின் விடுதியில் இருந்து, சுமார் 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் நேற்று முன்தினம் (நவம்பர் 17) அதிகாலையில் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மீது தாக்குதல் நடத்திய கடத்தல்காரர்கள், அங்குள்ள பாதுகாவலரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். நைஜீரியாவில் பல ஆயுதக் குழுக்கள் செயற்படுவதால், இவர்கள் பாடசாலைப் பிள்ளைகளையும் வெளிநாட்டினரையும் கடத்திப் பணப் பறிப்பில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இக்கடத்தலுக்கு நைஜீரியாவில் செயல்படும் போகோ ஹராம் உள்ளிட்ட எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

சம்பவ இடத்துக்கு விரைந்த நைஜீரியப் பாதுகாப்புப் படையினர், அருகிலுள்ள காடுகள் உள்ளிட்ட பதுங்குமிடங்களில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து, கடத்திச் செல்லப்பட்ட மாணவிகளை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version