25 68f364cea45aa
செய்திகள்உலகம்

வடிவமைப்பு குறைபாடுகள் மற்றும் பேட்டரி அபாயம்: 1,15,000-க்கும் அதிகமான வாகனங்களைத் திரும்பப் பெறுகிறது!

Share

சீனாவின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான BYD, வடிவமைப்பு குறைபாடுகள் மற்றும் பேட்டரி பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக, 1,15,000-க்கும் அதிகமான டாங்க் (Tang) மற்றும் யுவான் புரோ (Yuan Pro) வகை மின்சார வாகனங்களை சந்தையில் இருந்து திரும்பப் பெறவுள்ளதாகச் சீனச் சந்தை ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இன்று (அக்டோபர் 19) அறிவித்துள்ளது.

2015 மார்ச் முதல் 2017 ஜூலை வரை தயாரிக்கப்பட்ட 44,535 டாங்க் (Tang) ரக வாகனங்கள்.
2021 பிப்ரவரி முதல் 2022 ஆகஸ்ட் வரை தயாரிக்கப்பட்ட 71,248 யுவான் புரோ (Yuan Pro) ரக மின்சார வாகனங்கள்.

இந்த வாகனங்களில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்வதற்காக, BYD நிறுவனம் தனது அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்கள் மூலம் மென்பொருள் மற்றும் பாகங்களை மேம்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் 6,843 ஃபங் சென்பாவோ பாவ் 5 (Fangchengbao Bao 5) பிளக்-இன் ஹைபிரிட் SUV-களையும், செப்டம்பர் 2024 இல் சுமார் 97,000 டொல்பின் (Dolphin) மற்றும் யுவான் பிளஸ் (Yuan Plus) மின்சார வாகனங்களையும் இந்த நிறுவனம் திரும்பப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உலகளவில் தனது கார்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அதன் தரக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்துவதில் BYD தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை...

25 68f4c824ac515
செய்திகள்இலங்கை

ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர்...

Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...

25 68efb833da4d2
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள்

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...