1822704 hajj
செய்திகள்இலங்கை

அடுத்த வருட ஹஜ் யாத்திரை: பயண வாய்ப்பு உறுதிப்படுத்த அமானா வங்கியில் ரூ. 7.5 இலட்சம் வைப்பு அவசியம் – ஹஜ் குழு தலைவர்!

Share

அடுத்த வருடம் புனித ஹஜ் கடமைக்குச் செல்லப் பதிவு செய்துள்ளவர்கள் தங்களின் கடவுச்சீட்டுக்களை (Passport) தரகர்களிடம் கொடுக்காமல், தாங்கள் விரும்பிய ஹஜ் முகவர்களிடம் நேரடியாகக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹுலார் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமானா வங்கியில் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா (750,000) வைப்பில் வைத்திருப்பவர்களுக்கு ஹஜ் பயணத்துக்கான வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமய மற்றும் கலாசாரத் திணைக்களத்தில் நடைபெற்ற அடுத்த வருடத்துக்கான புனித ஹஜ் கடமைக்கான ஏற்பாடுகள் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

அடுத்த வருட ஹஜ் கடமைக்காக இலங்கையருக்கு 3,500 கோட்டா கிடைத்துள்ளது. இது அதிகரிக்கப்பட மாட்டாது. இந்தக் கோட்டாவில் உள்ள 3,500 பேரையும் கடந்த வருடம் போல மினாவில் ஒரே இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இலங்கையருக்கு வலயம் 2 பீ (Zone 2 B) தரத்தில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். இம்முறை விஐபி பக்கேஜ்கள் கிடையாது. யாரும் அதற்காக அதிக பணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Share
தொடர்புடையது
bike accident
இலங்கை

இளம் பெண்ணின் பட்டமளிப்பு விழா – கணவனையும் சகோதரனையும் இழந்த சோகம்.

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர்...

dead body 2
இலங்கை

அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்ற இளம் பிக்கு மரணம்.

ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில்...

Namal
இலங்கை

நாமலின் ரகசிய பயணம் !

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிய, கடந்த...

body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...