1822704 hajj
செய்திகள்இலங்கை

அடுத்த வருட ஹஜ் யாத்திரை: பயண வாய்ப்பு உறுதிப்படுத்த அமானா வங்கியில் ரூ. 7.5 இலட்சம் வைப்பு அவசியம் – ஹஜ் குழு தலைவர்!

Share

அடுத்த வருடம் புனித ஹஜ் கடமைக்குச் செல்லப் பதிவு செய்துள்ளவர்கள் தங்களின் கடவுச்சீட்டுக்களை (Passport) தரகர்களிடம் கொடுக்காமல், தாங்கள் விரும்பிய ஹஜ் முகவர்களிடம் நேரடியாகக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹுலார் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமானா வங்கியில் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா (750,000) வைப்பில் வைத்திருப்பவர்களுக்கு ஹஜ் பயணத்துக்கான வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமய மற்றும் கலாசாரத் திணைக்களத்தில் நடைபெற்ற அடுத்த வருடத்துக்கான புனித ஹஜ் கடமைக்கான ஏற்பாடுகள் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

அடுத்த வருட ஹஜ் கடமைக்காக இலங்கையருக்கு 3,500 கோட்டா கிடைத்துள்ளது. இது அதிகரிக்கப்பட மாட்டாது. இந்தக் கோட்டாவில் உள்ள 3,500 பேரையும் கடந்த வருடம் போல மினாவில் ஒரே இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இலங்கையருக்கு வலயம் 2 பீ (Zone 2 B) தரத்தில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். இம்முறை விஐபி பக்கேஜ்கள் கிடையாது. யாரும் அதற்காக அதிக பணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Share
தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...