11 9 720x375 1
செய்திகள்இலங்கை

அல்வாயில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம் – வீடுகள் தீக்கிரை

Share

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு குழுவினரின் அட்டகாசத்தில் இரண்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுதோடு மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன .

இந்த சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவினை சேர்ந்த “வெட்டுகுமார்” என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தலைமறைவாகியுள்ள ஏனையோரை தேடும் பணிகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இம்மாதம் 2 ஆம் திகதி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தினும் மதுபோதையில் நுழைந்த வெட்டுக்குமார், அவரது கூட்டாளிகள் அப்பகுதியிலுள்ள வீடுகளினுள் புகுந்து பொருட்களை அடித்துநொறுக்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்,

இதனால் 6 குடும்பங்கள் வீட்டிலிருந்து வெளியேறி வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த குழுவினர் நேற்று முன்தினம் (25) மீண்டும் இரு வீடுகளுக்கு பெற்றோல் ஊற்றி நெருப்பு வைத்துள்ளதோடு அந்தப்பகுதியிலுள்ள மேலும் சில வீட்டு ஜன்னல்களை உடைத்தும், சொத்துக்கள் மற்றும் உடமைகள் என்பவற்றுக்கு நெருப்பு வைத்தும் அவற்றை தீக்கிரையாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வெட்டுக்குமார் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவனது சகோதரனான ஜெயா உட்பட சிலர் தலைமறைவாகியுள்ளனர்.

இந்நிலையில் தாம் தினமும் பயத்துடனே வாழ்வதாக அல்வாய் வடக்கு மகாத்மா கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...