இராணுவக்கட்டுப்பாட்டில் நீண்டகாலமாக இருந்த யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பாதையான கட்டுவன்- மயிலிட்டி வீதியின் 400மீற்றர் தூரத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருட இறுதிப்பகுதியில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை சபைக் கூட்டத்தில் இதுதொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.
அதற்கமைய உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள 400 மீற்றர் பகுதியின் முட்கம்பி வேலிகள் இராணுவத்தினரால் பின்நகர்த்தப்பட்டு 400 மீற்றர் பகுதியை கட்டுவன்-மயிலிட்டி வீதியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி வீதியின் கிழக்கு பக்கமாக உள்ள இராணுவ உயர் பாதுகாப்பு வலய முட்கம்பி வேலிகள் அகற்றப்படுகின்றன.
தேசிய பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்து ஆறு மீற்றர் தூரம் பாதுகாப்பு வேலிகளை நகர்த்தி 400மீற்றர் நீளமான பகுதி வீதி அபிவிருத்தி அதிகார சபையினரிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews