23 6517bd8f77997 1
உலகம்செய்திகள்

ஒரு பொம்மைக்காக தேவையில்லாமல் உயிரைவிட்ட லண்டன் சிறுமி

Share

ஒரு பொம்மைக்காக தேவையில்லாமல் உயிரைவிட்ட லண்டன் சிறுமி

லண்டனில் சிறுமி ஒருத்தி கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட வழக்கில், புதிய தகவல்கள் சில வெளியாகியுள்ளன. ஒரு பொம்மைக்காக நடந்த சண்டையில் அவள் உயிரைவிட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஒரு பொம்மைக்காக உயிரைவிட்ட லண்டன் சிறுமி
புதன்கிழமை காலை, பள்ளிக்குச் செல்லும் வழியில், Elianne Andam (15) என்னும் சிறுமி. 17 வயது பையன் ஒருவனால் கொடூரமாகக் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் லண்டனில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.

அந்த பையன், Elianneஉடைய தோழி ஒருத்தியின் முன்னாள் காதலனாம். அவன் அந்தச் சிறுமியுடனான தன் காதலை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முயல, அந்த சிறுமி மறுக்க, இதற்கிடையில், அவன் வைத்திருந்த பை ஒன்றில் அந்த சிறுமியின் டெடி பியர் என்னும் கரடி பொம்மை ஒன்று உட்பட சில பொருட்கள் இருப்பதைக் கண்ட Elianne, தன் தோழியின் பொம்மை முதலான பொருட்களை அந்தப் பையனிடமிருந்து பறிக்க முயன்றிருக்கிறாள்.

அந்தப் பையன் முகத்தில் மாஸ்கும், கையில் கையுறைகளும் அணிந்து, ஒரு பயங்கர கத்தியையும் உடன் கொண்டு வந்துள்ளதைப் பார்த்தால், அவன் ஏதோ திட்டத்துடன் வந்துள்ளதுபோல தெரிகிறது.

அவனுக்கும், அவன் முன்னாள் காதலிக்கும் நடுவில் Elianne தலையிட்டு, அந்த பொம்மையைப் பறிக்க முயன்றிருக்கிறாள். பொம்மை முதலான பொருட்கள் இருந்த பையைப் பறித்துக்கொண்டு Elianne ஓட, முன்னாள் காதலியை விட்டு விட்டு, Elianneஐக் கத்தியுடன் துரத்தியிருக்கிறான் அந்தப் பையன்.

Elianneஐக் கத்தியால் தாக்கி, அவள் கீழே விழுந்த பிறகும், மீண்டும் மீண்டும் அவளை பயங்கரமாக குத்திக்கொண்டே இருந்திருக்கிறான் அந்தப் பையன். தேவையில்லாமல், தனக்கு சம்பந்தமில்லாத ஒரு விடயத்தில் தலையிட்டு, வாழவேண்டிய வயதில் உயிரைப் பறிகொடுத்திருக்கிறாள் Elianne.

இவ்வளவு கொடூரச் செயலைச் செய்தும், அவன் 17 வயதுடையவன் என்பதால், அவனது புகைப்படமோ, பெயரோ வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், Elianne கொல்லப்பட்ட இடத்தில் ஏராளமானோர் கூடி, பூங்கொத்துகளை வைத்து, அவளுக்கு அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.

Share
தொடர்புடையது
07 2
செய்திகள்அரசியல்இலங்கை

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர்: பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க இலங்கைக்கு மீண்டும் அழுத்தம்

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 61-வது கூட்டத்தொடரில், இலங்கை...

06 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் இடைநிறுத்தத்திற்கு எதிராக வழக்கு: மார்ச் 18-ல் விசாரணை

நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தனது பணி இடைநிறுத்தத்தை எதிர்த்துத் தாக்கல்...

05 2
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் அமேசான் தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்: வங்கி மற்றும் இணைய சேவைகள் முடக்கம்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான்...

04 2
செய்திகள்உலகம்

ஈரானின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோலஸ்தான் அரண்மனை சேதம்: யுனெஸ்கோ அமைப்பு கடும் கவலை

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அமைந்துள்ள உலகப் பாரம்பரியச் சின்னமான கோலஸ்தான் அரண்மனை (Golestan Palace), தற்போதைய...