25 6910899281fc4
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சைக் கடமையின்போது மதுபோதை: கிளிநொச்சி மேற்பார்வையாளர் பணி நீக்கம்!

Share

தற்போது நடைபெற்றுவரும் 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் (A/L Examination) கடமையின் போது மதுபோதையில் இருந்த குற்றச்சாட்டில், கிளிநொச்சியிலுள்ள பாடசாலை ஒன்றில் கடமையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பூநகரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் (கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்டது) கடமையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 20 ஆம் திகதி நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக் கடமையின் போது, குறித்த மேற்பார்வையாளர் மது போதையில் இருந்ததாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்துச் சம்பவ இடத்துக்கு விரைந்த பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள், மதுபோதையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளரை அந்தப் பணியில் இருந்து நீக்கியதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2Fka10y8tLGVxpVydY2Opn
செய்திகள்உலகம்

பிரித்தானிய நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டம்: பங்குச் சந்தை முதலீட்டை ஊக்குவிக்கச் சேமிப்புக் கணக்கு வரம்பு குறைய வாய்ப்பு!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) நாளைய தினம் (நவம்பர் 26) தனது வருடாந்தர...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...