hector appuhamy
செய்திகள்இலங்கை

ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் வரவு செலவுத் திட்டம்

Share

அமெரிக்க வரவு செலவுத்திட்டத்தைச் சமர்ப்பித்து ஏழை மக்களின் வயிற்றில் அடித்துள்ள இந்த அரசிடமிருந்து மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புகாமி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போது இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஏழைகளே இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட் டுள்ளார்கள்.

நாட்டில் விபத்து நடத்தால் விபத்தில் சிக்கியவர்கள் காப்புறுதி நிறுவனத்தின் மூலம் நட்டஈடுகளை பெறுவதே வழமை. ஆனால் இப்போது வழமைக்கு மாறாக விபத்தில் சிக்கியவர்களே அரசுக்கு நட்டஈடு செலுத்த வேண்டுமாம்.

ஏழை விபத்தில் சிக்கினால் ஏழைகளின் நிலைமை என்ன?

ஏழை விவசாயிகள் உரமின்றி விவசாயத்தை கைவிடும் நிலைக்குச் சென்றுள்ளனர்.
இதனால் மரக்கறிகளின் விலை கிலோ 700 ரூபாவிற்கும் அதிகமாக விற்கப்படுவதால் ஏழை மக்கள் அவற்றை வாங்கிச் சாப்பிட முடியாத நிலை உருவாகியுள்ளது.

எனவே நாடு மீண்டும் உணவுப் பஞ்சத்தை நோக்கியே நகர்ந்து செல்கின்றது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
combat motorcycle theft 770x470 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாடகைக்கு எடுத்து விற்பனை: பாரிய மோட்டார் சைக்கிள் மோசடி நபர் பலங்கொடையில் கைது!

வாடகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களைப் பெற்று, அவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் பாரிய மோசடியில் ஈடுபட்ட...

MediaFile 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நூரியில் கொடூரம்: 14 வயதுச் சிறுவன் அடித்துக் கொலை – தந்தையே கைது!

நூரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரியவத்தை 02-ஆம் பிரிவில் 14 வயதுடைய சிறுவனொருவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள...

combat motorcycle theft 770x470 1
செய்திகள்உலகம்

டெஸ்லாவை வீழ்த்தியது சீனாவின் BYD: உலகின் மிகப்பெரிய மின்சார வாகன விற்பனையாளராக உருவெடுத்தது!

மின்சார வாகன (EV) விற்பனையில் நீண்டகாலமாக முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க்கின் டெஸ்லா (Tesla) நிறுவனத்தைப்...

MediaFile 2 1
செய்திகள்இந்தியாஇலங்கை

காரைநகரில் 11 இந்திய மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அதிரடி!

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் நேற்றைய...