இலங்கையை கட்டியெழுப்புவோம்: 78-வது சுதந்திர தின விழா இலச்சினை மற்றும் தொனிப்பொருள் வெளியீடு!

26 6974a71f2c38f

இலங்கையின் 78-வது தேசிய சுதந்திர தின விழாவிற்கான உத்தியோகபூர்வ இலச்சினை (Logo) மற்றும் தொனிப்பொருள் (Theme) என்பன அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்வுகள் “இலங்கையை கட்டியெழுப்புவோம்” எனும் மகுட வாசகத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் தேசிய சுதந்திர தின விழா மிக விமர்சையாக நடைபெறவுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4-ஆம் திகதி முற்பகல், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் (Independence Square) பிரதான விழா நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன:

காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் விசேட கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். சுதந்திர சதுக்கத்தைச் சூழவுள்ள வீதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் மாற்றுப் பாதைகள் குறித்த விபரங்கள் காவல்துறை தலைமையகத்தினால் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புச் சூழலில், “நாட்டைக் கட்டியெழுப்புதல்” எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த விழா அமைவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

 

 

Exit mobile version