MediaFile 3 3 1
செய்திகள்இந்தியா

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களுக்குப் பிப்ரவரி 3 வரை விளக்கமறியல்!

Share

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று (20) யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மீனவர்களிடமிருந்து அவர்கள் பயன்படுத்திய இரண்டு விசைப்படகுகள் மற்றும் பெருமளவிலான மீன்பிடி உபகரணங்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று (21) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரணை செய்த நீதவான், அவர்களைப் பிப்ரவரி 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில், இலங்கை கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...