24 66ac07c4e08b5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: வீதியால் சென்ற முதியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

Share

யாழ்ப்பாணம், ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் ஓட்டுமடத்தைச் சேர்ந்த கனகரட்ணம் துரைராஜசிங்கம் (67 வயது) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டிலிருந்து அத்தியாவசியத் தேவை நிமித்தம் வெளியில் சென்ற இவர், ஆறுகால்மடம் மடத்தடிப் பகுதியில் வீதியோரமாகச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் பயணித்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி வீழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சடலம் மீட்கப்பட்டு மரண விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...