kulanthai
செய்திகள்உலகம்

வன்முறையால் 460 குழந்தைகள் சாவு – யுனிசெப் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Share

ஆப்கான் வன்முறையில் 460 குழந்தைகள் சாவடைந்ததாக யுனிசெப் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஆப்கானில் வன்முறையில் கடந்த 6மாதத்தில் மட்டும் 460 குழந்தைகள் சாவடைந்துள்ளனர்.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

குந்தூஸ் பகுதியில், போர்க்காலத்தில் பதுக்கிவைக்கப்பட்ட குண்டு திடீரென வெடித்ததால் அக்குடும்பமே பரிதாபமாக சாவடைந்துள்ளது .

அத்தோடுநாளுக்கு நாள் மூளை முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 முதல் 15 குழந்தைகள் தினமும் சிகிச்சைக்காக அழைத்துவரப்படுவதாக ஆப்கானை சேர்ந்த மருத்துவர் முகமது பாஹிம் தெரிவித்துள்ளார் .

பல ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு போர் குறித்து விளக்கிய யுனிசெப், ஆப்கானில் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

ஆப்கானில் இந்த ஆண்டில் மட்டும் இத்தனை குழந்தைகள் குண்டுவெடிப்பில்சாவடைந்தது கவலை அளிப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது .

வறுமை, உணவுப் பஞ்சம், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களாளும் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் யுனிசெப் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது .

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...