நைஜீரியாவின் வடமேற்கே மர்ம நபர்கள் நடாத்திய தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கவுரா நகரில் மடமய் கிராமத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இத் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 7 பேர் காயமடைந்து உள்ளனர்.
இந்த தாக்குதலின்போது, சில வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
நைஜீரியாவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment