file 20200511 49558 s7f11n
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டில் 30 வீதமானோருக்கு மூவேளை உணவில்லை!!!

Share

இந்நாட்டில் வாழும் சனத்தொகையில் 30 வீதமானோருக்கு மூவேளை உணவையும் முறையாக உண்ணமுடியாத விதத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று அரச பங்காளிக்கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க கூறியவை வருமாறு,

” எமது நாட்டு வெளிவிவகாரக் கொள்கையானது ஒரு திசையை நோக்கி இழுத்துச்செல்லப்படுகின்றது. இது பயங்கரமான நிலைமை ஏற்பட வழிவகுக்கும்.

அதேபோல நாளொன்றுக்கு லட்சம் ரூபாவை செலவளிப்பவர்களுக்கு, இந்நாட்டில் ஒருவேளை உணவைகூட உண்பதற்கு கஷ்டப்படுபவர்களும் வாழ்கின்றனர் என்பது தெரிந்திருக்குமா என தெரியவில்லை. இதுவும் பெரும் பிரச்சினையாகும்.

ஏனெனில் இந்நாட்டில் ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தை மந்த போசனை பிரச்சினையை எதிர்கொள்கின்றது. அத்துடன், 30 வீதமான மக்களுக்கு மூவேளை உணவை முறையாக உண்ண முடியாத நெருக்கடியான பொருளாதார நிலை உருவாகியுள்ளது. இந்நிலைமை குறித்து நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.

எமது ஆட்சிகாலத்தில் இதுவரை நாம் முன்னெடுத்த திட்டங்கள் தொடர்பில் 2022 இல் மீளாய்வு செய்யப்பட வேண்டும். சுய விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டும். அவ்வாறு சுய விமர்சனம் இல்லையேல் முன்னோக்கி செல்ல முடியாது.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 3 6
உலகம்செய்திகள்

பிரித்தானியா ஸ்தம்பிக்குமா? ஒரு வார கால முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள ‘he Great British National Strike அமைப்பு!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் புலம்பெயர்தல் விவகாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய ரீதியில் ஒரு...

Dead 1200px 22 10 28 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: மகள் மூட்டிய குப்பைத் தீ பரவி படுக்கையில் இருந்த தாய் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – அரியாலையில் மகள் மூட்டிய குப்பைத் தீயானது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் பரவியதில், படுக்கையில்...

archuna bail
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை அச்சுறுத்தல்: மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று(29) மல்லாகம்...

virat kohli 183099488 sm
விளையாட்டுசெய்திகள்

விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீர் மாயம்: நள்ளிரவு ‘ஷாக்’ கொடுத்துவிட்டு மீண்டும் திரும்பிய ‘கிங்’!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (@virat.kohli) இன்று (30) அதிகாலை...