se
செய்திகள்உலகம்

ஏமன் தாக்குதலில் 29 பேர் சாவு

Share

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மசூதி மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 29 பேர் சாவடைந்துள்ளனர்.

ஏமன் நாட்டில் மரீப் மாகாணத்தில் எண்ணை கிணறுகளைக் கைபற்றும் முயற்சியில் கடந்த மாசி மாதிலிருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திவருகிறார். இதனால் ஏமன் அரசு அவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அடிக்கடிபதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்று மரீப் பிரதேசத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்த மசூதியின் மீது ஏவுகணைத் தாக்குல் நடத்தியுள்ளனர். இதில் பெண்கள் குழந்தைகள் என 29 பேர் சாவடைந்துள்ளார்கள்.

சில ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் கொடூர தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் பலர் சாவடைந்துள்ளனர்.

கடந்த ஐப்பசி 25ம் திகதி ஏமன் – சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 264 பேர் சாவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...