24 மணி நேரத்தில் 253 பேர் கைது!
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 253 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டில் இதுவரை 54 ஆயிரத்து 612 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேல் மாகாண எல்லை ஊடாக பயணிக்க முற்பட்ட 2 ஆயிரத்து 411 பேரும் ஆயிரத்து 220 வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதில் 361 வாகனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Leave a comment