15 27
இந்தியாசெய்திகள்

மருத்துவமனைகளில் கோமியத்தை குடிக்க சொல்ல வேண்டும்.., சர்ச்சைக்கு பதிலளித்த சீமான்

Share

மருத்துவமனைகளில் கோமியத்தை குடிக்க சொல்ல வேண்டும்.., சர்ச்சைக்கு பதிலளித்த சீமான்

ஐஐடி இயக்குனர் பேசிய சர்ச்சை கருத்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்.

ஐஐடி இயக்குனர் காமகோடி செய்தியாளர்கள் சந்திப்பில், “மாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும். அதில், பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

இதனை அமெரிக்காவில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது. இந்த ஆவணத்தை உங்களுக்கு அனுப்புகிறேன்” என்றார்.

இவரின் பேச்சு சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் பாஜக மூத்த தலைவர் சௌந்தரராஜன் பேசுகையில், “ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியம், ‘அமிர்த நீர்’ என சொல்லப்பட்டிருக்கிறது” என்று சர்ச்சையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “மருத்துவமனைகளை மாட்டு கோமியத்தை குடிக்க சொல்ல வேண்டும். இந்த பைத்தியங்கள் கிட்ட நாடும் நாட்டு மக்களும் சிக்கி கொண்டுள்ளோம்.

மாட்டு பால் குடிக்கிறவர் இடைச்சாதி, மாட்டுக்கறி சாப்பிடுகிறவர் கீழ்சாதி, மாட்டு கோமியம் குடிக்கிறவர் உயர்ந்த சாதி. நம் நாட்டில் தான் நெய் எரிக்கப்படுகிறது, பால் கொட்டப்படுகிறது, கோமியம் குடிக்கப்படுகிறது” என்றார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...