7 24 scaled
இந்தியாசெய்திகள்

உதயநிதி துணை முதலமைச்சரானால் மிகப்பெரிய ஆபத்து: ஹெச்.ராஜா கருத்து

Share

உதயநிதி துணை முதலமைச்சரானால் மிகப்பெரிய ஆபத்து: ஹெச்.ராஜா கருத்து

உதயநிதி துணை முதலமைச்சரானால் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என்று ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக மாவட்டமான அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “சனாதனம் என்ன என்பதை உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. இந்து வாழ்வியலே சனாதானம்.

சனாதனத்தில் உள்ள உணவு, கல்வி, மருத்துவம் ஆகியவை தற்போது வியாபாரம் ஆகிவிட்டது. சனாதனத்தின் மீதான எதிர்ப்பு 180 ஆண்டுகளுக்கு முன்பாகவே உள்ளது.

சனாதனத்தில் கூறியுள்ளது போல கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்திற்கு எதிராக பேசி வருகிறார்.

அவர் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரானால் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவரை அவசரமாக பொலிஸ் சுட்டுக்கொன்றது ஏன்?

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று எதிர்க்கட்சிகள் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம்” என்றார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...