4 29
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் பரவும் கொடிய வைரஸ்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Share

இந்தியாவில் பரவும் கொடிய வைரஸ்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இந்தியா கேரளா மாநிலத்தில் நிபா வைரஸினால் (Nipah Virus) பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜோர்ஜ் (Veena George) தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த சிறுவனோடு தொடர்பு கொண்டவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த மக்களிடம் முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வைரஸ், பன்றிகள் மற்றும் பழ வெளவால்கள் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக் கூடியது என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

அதேவேளை, அசுத்தமான உணவு மற்றும் நோய்த் தாக்கத்துக்கு உள்ளான நபருடன் தொடர்பு கொள்வதன் மூலமும் இது பரவுகிறது.

முன்னுரிமை நோய்க்கிருமி
இது, ஒரு சர்வதேச தொற்றுப் பரவலை ஏற்படுத்தக் கூடியது என்பதால் உலக சுகாதார தாபனத்தால் முன்னுரிமை நோய்க்கிருமியாக விபரிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் கேரள மாநிலத்தில் முதன்முதலாக 2018ஆம் ஆண்டு பதிவாகியிருந்ததுடன் இதுவரை 12இற்கும் அதிகமான உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...