12 7 scaled
இந்தியாசெய்திகள்

தங்க,வெள்ளி நூலால் நெய்யப்பட்ட புடவையை வாங்கிய நீதா அம்பானி – அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Share

தங்க,வெள்ளி நூலால் நெய்யப்பட்ட புடவையை வாங்கிய நீதா அம்பானி – அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தங்க,வெள்ளி நூலால் நெய்யப்பட்ட புடவையை வாங்கிய நீதா அம்பானி – அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Nita Ambani Buy Special Saree For Wedding Price
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தரிசனத்திற்காக சென்ற நீதா அம்பானி இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு புடவை வாங்குவதற்காக சென்றுள்ளார்.

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, எப்போதும் ஆடம்பர வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்து வருகிறார்.

நீதா அம்பானிக்கு அரிய மற்றும் அதிக விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்துவதில் அதிக ஆசை உள்ளதாக பல மேடையில் கூறியுள்ளார்.

அந்தவகையில் தற்போது அவருடைய இளைய மகனின் திருமணத்திற்கு முன்னாயத்தங்களை செய்துக் கொண்டு வருகிறார்.

திருமணத்திற்கு முன், அம்பானி குடும்பம் இரண்டு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களை நடத்தியது. முதலில், ஜாம்நகரில் ஒரு ஆடம்பரமான மூன்று நாள் நிகழ்வு, அதைத் தொடர்ந்து மத்திய தரைக்கடல் வழியாக ஒரு ஆடம்பரமான கப்பல் பயணம்.

அவர்களின் திருமண அழைப்பிதழ் தற்போது அனைவரது கவனத்தை ஈர்த்தது.

அதற்காக திருமணத்திற்கு முன்னதாக ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் சிவபெருமானுக்கு அழைப்பிதழ் வழங்க வாரணாசிக்கு விஜயம் செய்து, பின் புடவை வாங்குவதற்கும் சென்றுள்ளார்.

நீதா அம்பானி தனிப்பட்ட முறையில் புடவைகளை மதிப்பாய்வு செய்து, தங்கம் மற்றும் வெள்ளி நூல்களால் அலங்கரிக்கப்பட்ட சிவப்பு இலட்சம் புட்டி புடவையைத் தேர்ந்தெடுத்தார்

பின் அதை அவர் 1,80,000 ரூபாய்க்கு வாங்கியும் இருக்கிறார்.

புடவை வியாபாரி அம்ரேஷ் குஷ்வாஹா கூறுகையில், “நீதா அம்பானியின் குழு என்னைத் தொடர்பு கொண்டது, அதனால் நான் ஹோட்டலுக்கு 60 புடவைகளை கொண்டு வந்தேன். நள்ளிரவில், நீதா அம்பானி தனிப்பட்ட முறையில் அனைத்து புடவைகளையும் பார்த்து ங்கம் மற்றும் வெள்ளி நூல்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு லட்சம் புட்டி புடவையை விரும்பி எடுத்தார்.

வெள்ளி நூல்களால் பட்டுத் துணியில் நெய்யப்பட்டு தங்கத்தால் முடிக்கப்பட்ட புடவையை தயாரிப்பதற்கு 60 முதல் 62 நாட்கள் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஜூலை 12 ஆம் தேதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் திருமணம் செய்ய உள்ளனர். இந்து முறைப்படி நடைபெறும் திருமணம் மூன்று நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...